பல்பொருள் அங்காடியில் ரவுடிகள் அட்டூழியம்: காஞ்சியில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு

காஞ்சிபுரத்தில் பல்பொருள் அங்காடியில் புகுந்த ரவுடி கும்பல் அந்த அங்காடியை அடித்து நொறுக்கியதுடன் பல்வேறு இடங்களில் 4 பேரை அரிவாளால் வெட்டியுள்ளது.

காஞ்சிபுரத்தில் முக்கிய தாதாவாக வலம் வந்தவர் ஸ்ரீதர். இவர் காவல் துறையின் நெருக்கடி காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு கம்போடியா தப்பிச் சென்று அங்கு தற்கொலை செய்து கொண்டார். தர் இறந்த பிறகு அவரது இடத்தை யார் பிடிப்பது என்பது தொடர்பாக அவரது உறவினர் தணிகா மற்றும் கார் ஓட்டுநர் தினேஷ் ஆகியோருக்கு இடையே போட்டி ஏற்பட்டது. இதற்காக 2 குழுக்களும் அவ்வப்போது மோதிக் கொள்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments