ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூ.20 லட்சம் இழப்பு: மனமுடைந்த கார் ஓட்டுநர் தற்கொலை

தாம்பரம் கிழக்கு பகுதி, ஆனந்தபுரம் ஜெகஜீவன் ராம் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (30). கார் ஓட்டுநர். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மீது கொண்ட மோகத்தால் வேலைக்குசெல்லாமல் வீட்டில் இருந்தபடியே, மொபைல் போனில் ரம்மி விளையாடி வந்தார். தொடக்கத்தில் ரம்மி விளையாட்டில் ரூ. 1 லட்சம் வரை பணத்தை சம்பாதித்த முருகன் தொடர்ந்து பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ரம்மி விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி பகல், இரவு பாராமல் ரம்மி விளையாட்டில் மூழ்கினார்.

இந்நிலையில் சமீபத்தில், தன் மனைவி பிரியாவின் நகைகளை அடகு வைத்தும் கடன் வாங்கியும் பல லட்சம் வரை சூதாடி தோற்று ஏமாந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த முருகன் நேற்று முன்தினம், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, முருகனின் தாய் நெம்மிலியம்மாள் (53) அளித்த புகாரின்படி சேலையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments