பண மோசடி வழக்கு முன்னாள் அமைச்சர் சரோஜாவை நவம்பர் 24 வரை கைது செய்யக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.76.50 லட்சம் மோசடி செய்ததாக பதியப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக நவ. 24 வரை கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் சரோஜா. சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.76.50 லட்சம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜன் மீது குணசீலன் என்பவர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் சரோஜா மற்றும் அவரது கணவர் மீது போலீஸார் பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் 

Post a Comment

0 Comments