
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடு திருடர்களை மடக்கிப் பிடித்தபோது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் எஸ்.பூமிநாதன் (50). இவரும்,தலைமைக் காவலர் சித்திரவேலுவும் நேற்று முன்தினம் அதிகாலை பூலாங்குடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் ஆடுடன் வந்த 3 பேரை அவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதால் பூமிநாதனும், சித்திரவேலுவும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் அவர்களை விரட்டிச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments