
திருச்செந்தூர் அருகே கோயிலுக்கு சொந்தமான சுமார் 100 பவுன் நகைகளை ஒப்படைக்க மறுப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பாஜக நிர்வாகி உள்ளிட்ட 14 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள வீரமாணிக்கம் கிராமத்தில் ஒரே வளாகத்தில் வீரபத்ரகாளியம்மன், சந்தி அம்மன், சுடலைமாடன் ஆகிய மூன்று கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. தக்காராக அ.காந்திமதி என்பவர் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments