
அகில இந்திய அளவில் பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019 ஜன.4-ம்தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி ஆஷாஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போதுநீதிபதிகள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து தடை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments