கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்தில் உயிரிழந்த யானையின் தந்தங்களை திருடிச் சென்ற கும்பல்: தனிக் குழுக்கள் அமைத்து வனத்துறையினர் விசாரணை

கோவையில் உயிரிழந்த யானை யின் தந்தங்களை திருடிச் சென்றகும்பலை கண்டறிய 4 தனிக்குழுக்கள் அமைத்து வனத்துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை போளுவாம்பட்டி வனச் சரகத்துக்குட்பட்ட வெள்ளியங்கிரி மலை அடிவாரப்பகுதி, மடக்காடு அருகே வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதுதெரியவந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: யானை உயிரிழந்து 40 நாட்கள் ஆகி இருக்கலாம். யானை யின் எலும்புகள் மட்டுமே எஞ்சியிருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments