
எம்.கே.பி நகரில் காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார். கடன் பிரச்சினையால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வியாசர்பாடி எம்கேபி நகரைச் சேர்ந்தவர் ஹரிஷ் சந்த் (55). இவர் இதே பகுதியில் ஜவுளிக் கடை வைத்து நடத்தி வந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் வட சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்தார். ஹரிஷ் சந்துக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments