தங்கவேட்டைக்கு முயற்சிக்கும் தொழிலாளர்கள் தேவாலாவில் தங்கச்சுரங்கங்களால் பாதிக்கப்படும் வன விலங்குகள்: கண்காணிப்பை தீவிரப்படுத்துமா வனத்துறை?

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்து தேவாலா, நாடுகானி, கைதக்கொல்லி, பந்தலூர் வரையிலான பகுதிகளில் தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்றளவும் சிலர் மண்ணை தோண்டிக் கொண்டே இருக்கின்றனர். இக்குழிகளிலும், ஏற்கெனவே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தோண்டப்பட்ட சுரங்கக் குழிகளிலும் வன விலங்குகள் விழுந்து உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது என வன ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: நாடுகானி, தேவாலா,பந்தலூர் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளைச் சேர்ந்த சிலர், இங்கு தங்கம் இருக்கும் என்றநம்பிக்கையில் தொடர்ந்து மண்ணை தோண்டி வருகின்றனர்.இதற்காக புதிதாககுழிகள் அமைக்கின்றனர். நீள சுரங்கப்பாதையும், 100 முதல் 300 அடிக்கு கீழ் உள்ள,தங்கப்படிமங்கள் நிறைந்த பாறைகளை உடைத்து, அவற்றை மில்களில் கொடுத்து, மாவாக அரைத்து,காயவைத்து, தண்ணீரில் அலசி, பாதரசம் மூலம் தங்கத்தைப் பிரித்து எடுக்கின்றனர். இவை, உள்ளூர் நகைக் கடைகளில், அன்றைய மார்க்கெட்டை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக சுரங்கக் குழிகளில் இறங்கி, பலர் தங்களது உயிரை பணயம் வைக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments