ஆவடி அருகே பட்டாபிராம், சி.டி.எச். சாலையில் உள்ள ரயில்வே கடவுப்பாதையை கடந்து, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்குக்கு நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று திரும்புகின்றன. ஆகவே, இந்த கடவுப்பாதை முக்கால் மணி நேரத்துக்கு ஒருமுறைமூடப்படுவதால், கடவுப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் நூற்றுக்கணக்கில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.

இதைத் தவிர்க்கும் வகையில், கடந்த 2010-11-ம் நிதியாண்டில் பட்டாபிராம் பகுதியில் ரூ.33.48 கோடி மதிப்பில் 4 வழிச்சாலையாக ரயில்வே மேம்பாலம் அமைக்க, ரயில்வே, நெடுஞ்சாலை துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்