தொழிலாளர் கொலை வழக்கில் திமுக எம்பி ரமேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி

பண்ருட்டி அருகே உள்ள பனிக்கன்குப்பத்தில் திமுகவைச் சேர்ந்த கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷூக்கு சொந்தமான முந்திரி ஆலை அமைந்துள்ளது. இங்கு வேலை பார்த்து வந்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் கடந்த செப்.19-ம் தேதி இரவு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார், இதை கொலை வழக்காக பதிவு செய்து, கடந்த 9-ம் தேதியன்று எம்பி ரமேஷ் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, ரமேஷின் உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். கடந்த 11-ம் தேதி பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் ரமேஷ் சரணடைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments