
நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி மர்ம கும்பல் நுழைந்து, ஆவணங்கள், பொருட்களை கொள்ளையடித்து விட்டு, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு தப்பியது. இந்த சம்பவத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 2017-ம்ஆண்டு ஏப்.27-ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சந்தனகிரி பகுதியில் சாலை விபத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments