ஜெயலலிதா வழங்கிய பட்டா நிலம் அபகரிப்பு: மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்டோர் புகார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஜெயலலிதா முதல் வராக இருந்தபோது வழங்கிய பட்டா நிலத்தை அதிகாரிகள் அபகரித்து விட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தனர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வைத்தியலிங்கபுரத்தில் உள்ள ஏழை, எளியோர் 25 பேருக்கு மொட்டமலை பகுதியில் இல வச வீட்டுமனைப் பட்டா வழங்கப் பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரால் இந்தப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த இடத்தை நத்தம் புறம்போக்கு பகுதியில் அதி காரிகள் சேர்த்து விட்டதாக வும், அதிகாரிகள் அதை பயன் படுத்தி வருவதாகவும் கூறி பாதிக் கப்பட்டோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி யிடம் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறிய தாவது: முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்நத்தம் வந் தார். அப்போது அவரது கைகளால் 25 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது அதிகாரிகள் அந்த இடத்தை நத்தத்தில் சேர்த்துவிட்டதாகக் கூறுகிறார்கள். மேலும், எங்கள் இடத்தை அதிகாரிகள் பயன்படுத்தி வரு கிறார்கள். எங்களுக்கு வழங்கப் பட்ட நிலத்தை அபகரித்தவர்களி டம் இருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments