
திருப்பூரில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி முதலீட்டாளர்களிடம் ரூ.53 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
திருப்பூர் மாவட்டம் படியூர் கணபதிபாளையம் அருகேயுள்ள காவலன் காட்டுத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.கந்தசாமி (51). இவரும், கே.செட்டிபாளையத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்(53),அங்கேரிபாளையத்தை சேர்ந்தபி.பெருமாள்ராஜ்(54), நெருப்பெரிச்சலை சேர்ந்த எஸ்.சரவணன்(47) மற்றும் அவிநாசிஅருகேயுள்ள சென்னிமலைக்கவுண்டன்புதூரைச் சேர்ந்த பி.அசோக்குமார்(33) ஆகிய 5 பேரும் சேர்ந்து கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், திருப்பூர் அடுத்த காவலன் காட்டுத்தோட்டம் பகுதியில் ஏ.கே.ஏ. ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கினர். தொடர்ந்து முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் இருவேறு திட்டங்களை அறிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments