
சென்னை மாநகராட்சி உற்பத்தி செய்யும் இயற்கை உரம், சுமார் 1,750 டன் அளவில் கையிருப்பில் உள்ளது. அதை ‘உரம்’ என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
உள்ளாட்சி அமைப்புகள் முறையாக திடக்கழிவு மேலாண்மை செய்வதற்காக மத்திய அரசு, தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கி, அதன்மூலம் நிதி ஒதுக்கி வருகிறது. சென்னையில் தினமும் சராசரியாக 5,200 டன் குப்பைகள் உருவாகின்றன. இதுநாள் வரை அவை அனைத்தும் அப்படியே கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments