
கொங்கு மண்டல தொழில் ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக, ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை முதலீடு செய்து உதவுவோம் என ‘சோஹோ’ ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
தொழில்நுட்ப நிறுவனமான ‘சோஹோ’வின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு, கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு உள்ளூர் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள், பல்வேறு தொழில் கூட்டமைப்பு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோரை சந்தித்து நேற்று கலந்துரையாடினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments