
தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்ந்தால், கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையில் புள்ளிவிவரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் உள்ள பாதிப்புகளை ஆராய முன்னாள் நீதிபதிஏ.கே.ராஜன் தலைமையில் சுகாதாரத் துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை தமிழக அரசுஅமைத்தது. அந்த குழுவினர் நீட் தேர்வின் தாக்கம் குறித்துபுள்ளி விவரங்களின் அடிப்படையில் ஆராய்ந்தனர். நீட் தேர்வின்தாக்கம் குறித்து பொதுமக்களிடம் இருந்தும் கருத்துகளை பெற்றனர்.அந்த வகையில், சுமார் 85 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39oWl9e
0 Comments