தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது: பாமக, தேமுதிக தனித்துப் போட்டி; கூட்டணிகள் உடைகின்றன

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பாமகவும், தேமுதிகவும் அறிவித்துள்ளன. இதனால், அதிமுக மற்றும் அமமுக கூட்டணிகள் உடைகின்றன.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ltBGq3

Post a Comment

0 Comments