சிறுதாவூர் பங்களா அருகே உள்ள சுதாகரனுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் முடக்கம்: வருமானவரித் துறை நடவடிக்கை

சிறுதாவூர் பங்களா அருகே உள்ளவி.என்.சுதாகரனுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் பினாமி தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டுள்ளது.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடுகள் உட்பட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2017-ம் ஆண்டு சோதனை நடத்தினர். சசிகலாவின் அக்காள் மகன் வி.என்.சுதாகரன் (ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்தவர்) வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில்ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அந்தஆவணங்களை ஆய்வு செய்ததில்,பினாமிகள் பெயரில் பல ஆயிரம்கோடிக்கு சொத்துகள் வாங்கியிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பினாமிகளின் முழு விவரங்கள் கண்டறியப்பட்டு, அவர்களின் சொத்துகளை வருமானவரித்துறை தொடர்ந்து முடக்கி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XqQPQM

Post a Comment

0 Comments