சுமார் 4 நாள்களுக்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு நேற்று ஆதரவு அளித்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்கும் விஜய்யிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் விசிகவின் முக்கிய நிர்வாகி ஆளூர் ஷா நவாஸ்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு முதலமைச்சராகும் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கும் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்போருக்கும் வாழ்த்துகள்.

கடந்த திமுக ஆட்சியில் திரு.கோவி செழியன், திரு.அன்பில் மகேஸ் ஆகியோரிடம் கல்வித்துறை இருந்தது. கல்வி மறுக்கப்பட்ட சமூகப் பின்னணியில் இருந்து சமூகநீதி அடிப்படையில் மேலெழுந்து வந்தவர்களின் கைகளில் அத்துறை இருப்பதே நன்று. தவெக அமைச்சரவையிலும் அந்நிலை தொடர வேண்டும்.
தமிழ்நாட்டின் கல்வி வரலாறும் அரசியல் வரலாறும் வேறு வேறல்ல. கல்வியே நம் அரசியல். கல்விக்காகவே நம் அரசியல்". என்றிருக்கிறார்.
from India News https://ift.tt/de9nNqf
0 Comments