"பெண்களை வெறும் உடலாக மட்டும் பார்ப்பதே RSS, BJP-இன் சித்தாந்தம்" - நயினார் மீது ஜோதிமணி காட்டம்

"பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கிற ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சித்தாந்தத்தின் வெளிப்பாடே இது. பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தனது கருத்துக்கு பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் செய்துள்ள பதிவில்,

"பொதுவாழ்வில் ஒரு கட்சித் தலைவர் மீது உங்களுக்கு விமர்சனங்கள் இருந்தால் கருத்து ரீதியாக அவரை எதிர்கொள்ளுங்கள். விமர்சனம் செய்யுங்கள்.

அதைச் செய்ய முடியாமல் ஒரு பெண்ணை ஆபாசமாகப் பொதுவெளியில் பேசுவது பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம், பார்க்கலாம், விமர்சிக்கலாம் என்கிற ஆபத்தான, அருவருக்கத்தக்க மனநிலையின் உச்சம். கடுமையான கண்டனத்துக்குரியது.

கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி
கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கிற ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சித்தாந்தத்தின் வெளிப்பாடே இது. பா.ஜ.க மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் தனது கருத்துக்கு பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.



from India News https://ift.tt/gau8RkG

Post a Comment

0 Comments