``ஆம் ஆத்மிக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்லவேண்டியதில்லை..!" - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கு மே 25 அன்று வாக்குப்பதிவு நடைபெறும். இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில், கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 50 நாள்கள் சிறைவாசத்திலிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

ஆம் ஆத்மி - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் மோதி நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது,``நான் சிறையிலிருந்தாலும் ஆம் ஆத்மி உங்களுக்கான பணிகள் தொடர்ந்து மேற்கொண்டது. தற்போது ஜாமீனில் வெளியே அனுப்பப்பட்டிருக்கிறேன். 20 நாள்களுக்குப் பிறகு மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும். நீங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளித்தால் நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை.

ஒருவேளை நான் மீண்டும் சிறைக்குச் சென்றால், பா.ஜ.க, ஆம் ஆத்மி அரசால் வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை நிறுத்தும், பள்ளிகளைச் சீரழிக்கும், மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை மூடும். நான் உங்களுக்காக உழைத்ததால் என்னைச் சிறைக்கு அனுப்பினார்கள். டெல்லி மக்களுக்கான முன்னேற்றப் பணி நடைபெறுவதை பா.ஜ.க விரும்பவில்லை." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/CWwUdOq

Post a Comment

0 Comments