ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு பின்னர் 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்ட நான்கு பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இருப்பினும், தனக்கென்று தனி அணியை உருவாக்கி, புதிய நிர்வாகிகளை நியமித்து போட்டி அதிமுகவை நடத்தி வந்தார் ஓ.பி.எஸ். இதனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் அ.தி.மு.க-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ' அ.தி.மு.க பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓ.பி.எஸ் பயன்படுத்த தடை' என தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, கட்சி கறை வேட்டியைகூட கட்டமுடியாத நிலைக்கு ஓ.பி.எஸ் தள்ளப்பட்டார். அதேபோல, முன்னாள் முதல்வர் என்ற லெட்டர்பேடில் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
தொடர்ந்து தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார் ஓ.பி.எஸ். இந்த வழக்கில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அமர்வு 'தடை விதித்தது செல்லும்' என தீர்ப்பளித்தனர். 'வேண்டுமானால் ஓபிஎஸ் தரப்பு, தனி நீதிபதி முன் உரிய மனு தாக்கல் செய்யலாம்' என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். இந்த மேல்முறையிட்டு வழக்கை நம்பியிருந்த ஓ.பி.எஸ் தரப்புக்கு இது அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.
இதுதொடர்பாக ஓ.பி.எஸ்-ஸுக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்... ``இது ஒன்றும் இறுதி தீர்ப்பு இல்லை. மேல்முறையீடு சென்று அங்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதையெல்லாம் தாண்டி கட்சி இல்லையென்றாலும் ஓ.பி.எஸ்-ஸுக்கென்று தனி செல்வாக்கு இருக்கிறது. அதைதான் டெல்லி பா.ஜ.க விரும்புகிறது. எடப்பாடியை வீழ்த்துவதற்கு டெல்லிக்கு அது தேவை. அதனால்தான், ஓ.பி.எஸ்., டி.டி.வி தினகரன்., பா.ஜ.க, ஜான்பாண்டியன், தேவநாதன், ஜி.கே.வாசன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரை வைத்து கூட்டணி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த கூட்டணியை வெற்றிக்கரமாக அமைத்து எடப்பாடியை வீழ்த்துவதுதான் ஓ.பி.எஸ்-ஸின் அடுத்த மூவ்வாக இருக்கிறது. அதற்கு முன்பாக, தனது தரப்பை வலுப்படுத்த தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதில் நிச்சயம் பயன் கிடைக்கும்" என்றனர் நம்பிக்கையில்.
தொடர்ந்து ஓ.பி.எஸ் ஆதரவாளர் மருது அழகுராஜிடம் கேட்டபோது, "அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவின் தமிழ்நாடு தழுவிய ஆலோசனை கூட்டம் மூலமாக சூறாவளியாக சுற்றி வருகிறார் ஓ.பி.எஸ்.
கொடி கட்டக்கூடாது, கட்சி கரை வேட்டி கட்டக்கூடாதுன்னு நீதிமன்றத்தின் மூலம் எத்தனை நிர்பந்தங்களை செய்தாலும் ஓ.பி.எஸ். போகிற இடமல்லாம் அவ்வளவு கூட்டம் கூடுகிறது. இது தான் நல்லவர்களை நற்றமிழ் பூமி கைவிட்டு விடாது என்பதற்கான எடுத்துக்காட்டு. அதேபோல, நீதிமன்றம் மூலமாகவும் நல்ல தீர்ப்பு எங்களுக்கு கிடைக்கும்" என்றார் உறுதியாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/AwnxfpE
0 Comments