மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000 - தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மக்கள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தனர். குறிப்பாக சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ள பாதிப்பால், தங்கள் உடமைகளை இழந்து, பரிதவிப்பு நிலைக்குத் தள்ளப்பட்டனர். தற்போது வெள்ள பாதிப்பிலிருந்து மக்கள் மெல்ல மீண்டெழுந்திருக்கும் நிலையில், தமிழக அரசு புயல் நிவாரணமாக ரூ.6,000 அறிவித்தது.

எந்தெந்த பகுதிகளில், யார் யாருக்கு நிவாரணத் தொகை கிடைக்கும் என்பதைத் தெளிவுபடுத்திய அரசு, அதற்கான டோக்கன்களையும் விநியோகிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், டோக்கன் கிடைக்கப்பெற்றவர்களுக்கு நிவாரணத் தொகையான 6,000 ரூபாயை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கி, நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.







சென்னை வேளச்சேரி, சக்தி விஜயலட்சுமி நகரிலுள்ள நியாய விலைக்கடையில், மிக்ஜாம் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கி, நிகழ்வை ம்முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
from India News https://ift.tt/HOCUJor
0 Comments