``அது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அல்ல; அது ஒரு கும்பல்!" - ஓ.பி.எஸ் விமர்சனம்

மதுரையில், தனது ஆதரவாளர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "காஞ்சிபுரத்தில் தொடங்குவதாக இருந்து ரத்தான புரட்சிப் பயணத்தை தொண்டர்களின் விருப்பத்தின்படி விரைவில் தொடங்க உள்ளேன்." என்றவர்,

ஓ.பன்னீர்செல்வம்

"சனாதனம் குறித்த பிரச்னைக்கு ஏற்கனவே முழுமையான அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது." என்றார்.

"எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறதே" என்ற கேள்விக்கு,

"இன்று நடைபெறுவது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அல்ல. அது ஒரு கும்பல்." என்றவர்,

"இறையாண்மை போற்றும் ஒரே ஆட்சி, திமுக ஆட்சி என்ற மு.க.ஸ்டாலின் கூறுவதையெல்லாம் ஒரு கருத்தாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது." என்றார்.

ஓ.பி.எஸ்

"இந்தியாவுக்கு பாரத் என்ற பெயர் மாற்றத்துக்கு தாங்கள் ஆதரவா?" என்ற கேள்விக்கு

"பெயர் மாற்றம் குறித்து இன்னும் முறையான அரசாணை வெளியிடப்படவில்லை. முழுமையான அறிவிப்பு வந்த பிறகு அது குறித்து பேசலாம்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/0u6IzRO

Post a Comment

0 Comments