தன்னுடைய வளர்ப்பு நாய் சிறுவன் ஒருவனை கடிக்க, அதை வேடிக்கைபார்த்தபடி நின்ற பெண்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த ஹவுசிங் சொசைட்டி லிஃப்டில் ஒரு சிறுவன் உள்ளே நின்று கொண்டிருந்தான். சிறுவன் லிஃப்டில் இருக்கும்போதே அதே குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய வளர்ப்பு நாயுடன் நுழைந்திருக்கிறார். சிறுவன் தான் செல்லவேண்டிய தளத்தை தேர்வு செய்வதற்காக முன்னோக்கி நகர்ந்தான்.
a pet dog bites a kid in the lift while the pet owner keeps watching even while the pet owner the kid is in pain! where is the moral code here just cos no one is looking?
— Akassh Ashok Gupta (@peepoye_) September 6, 2022
.
.
p.s: @ghaziabadpolice
Location: Charms Castle, Rajnagar Extension, Ghaziabad
Dtd: 5-Sep-22 | 6:01 PM IST pic.twitter.com/Qyk6jj6u1e
அப்போது, அந்தப் பெண்ணின் வளர்ப்பு நாய் சிறுவனை பாய்ந்து கடித்தது. நாய் கடித்ததில் சிறுவன் வலியில் ஒரு காலில் மேலும் கீழும் குதிக்க ஆரம்பித்தான். சிறுவன் வலியால் துடித்தபோதும் அந்தப் பெண் கேஷுவலாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சிறுவனின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்திருக்கின்றனர். இதையடுத்து, உள்ளூர் போலீஸார் அந்தப் பெண்மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/dJ1ahcC
0 Comments