
அதிமுக தலைமை பதவியை கைப்பற்றசசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அது தனது குரல் அல்ல என்று செல்லூர் ராஜூ மறுத்துஉள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுசசிகலாவை அதிமுகவில் பலர் விமர்சித்தாலும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சனம் செய்தது இல்லை. சசிகலா மீது தான் மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாக பொதுவெளியில் பகிரங்கமாகக் கூறி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments