
ஒமைக்ரான் எச்சரிக்கையால் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. இதில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு போதிய வசதி செய்யப்படவில்லை என்றும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கை சரியில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா, சீனா, சிங்கப்பூர், நியூசிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வீரியமிக்கதாக இருக்குமென உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் தீவிரப்படுத்திஉள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3deXEJS
0 Comments