
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போரூர், மாங்காடு, ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழகத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் போரூர் ஏரியும் முழுமையாக நிரம்பியது. தொடர்கனமழை காரணமாக ஏரிக்குநீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. உபரிநீர் வெளியேற வழி இல்லாததால் ஏரியை சுற்றி உள்ள மவுலிவாக்கம், ஐயப்பன்தாங்கல், பரணிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3IjGRn2
0 Comments