
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 2021-22 நிதியாண்டில் மத்திய அரசின் பங்கு ரூ.816 கோடி உட்பட தமிழக அரசுக்கு ரூ.1,088 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் 8-ம் தேதி பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “தமிழகத்தில் சமீபத்தில் பெய்த பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், குறிப்பாக கடற்கரை பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட நிதி உதவி கோரி தமிழக அரசிடம் இருந்து, கோரிக்கை வந்துள்ளதா? உயிரிழந்தவர்கள், சேத விவரங்களை தர வேண்டும்’’ என்று கேள்வி எழுப்பினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments