
விவசாயிகளின் தொடர் எதிர்ப்பு காரணமாக அன்னூர் அருகே டிட்கோ சார்பில் 3,832 ஏக்கர் நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கோவை அன்னூரை அடுத்த குப்பனூர், அக்கரைசெங்கப்பள்ளி, வடக்கலூர், பொகளூர், இலுப்பநத்தம், பொள்ளேபாளையம் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். வாழை, தென்னை, மஞ்சள், சோளம், சின்னவெங்காயம், காய்கறிகள் உள்ளிட்டவை அந்தப் பகுதியில் பயிரிடப்படுகின்றன. ஆடு, மாடுகள் வளர்ப்பும் இங்குமுக்கிய தொழிலாக உள்ளது. தினமும் சுமார் 20 ஆயிரம் லிட்டர்பால் இங்கு உற்பத்தியாகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments