வரும் 11-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்; 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு: அமைச்சர் சி.வெ.கணேசன் நம்பிக்கை

தி.மலையில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 2 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவோம் என தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தி.மலை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று மாலை ஆய்வு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments