புதுச்சேரி அரசுடன் ஒப்பந்தம் செய்து மூன்றாண்டுகள் கடந்தது; ‘அட்சய பாத்ரா’வில் உணவு தயாரித்து மாணவர்களுக்கு விநியோகிப்பது எப்போது?- கிடப்பில் போடப்பட்ட காலை உணவுத் திட்டம்

புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தர'அட்சய பாத்ரா'வுடன் கல்வித் துறை ஒப்பந்தம் செய்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் நிறைவடையவில்லை. அதே நேரத்தில் தமிழக முன்னாள் முதல்வர்கருணாநிதி பெயரில் தொடங்கப் பட்ட காலை உணவுத் திட்டமும் கிடப்பில் உள்ளது.

புதுச்சேரி பள்ளி கல்வி இயக் ககம், பெங்களூரைச் சேர்ந்த அட்சய பாத்ரா அறக்கட்டளையுடன் இணைந்து அரசுப் பள்ளி மாண வர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததில் கடந்த 2018 ஜூலையில் கையெழுத்திட்டுள்ளது. இந்த அறக்கட்டளை யானது மதிய உணவை 12 மாநிலங்களில் செயல்படுத்துகிறது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடக்கமாக புதுச்சேரி பகுதியில் இயங்கி வரும் அரசு மற்றும் உதவிபெறும் 300 பள்ளிகளைச் சேர்ந்த 50 ஆயிரம் மாணவர்களுக்கு உணவளிக்க திட்டமிட்டனர். இதற்காக லாஸ்பேட்டையில் அமைந்துள்ள மைய சமையற்கூடம் அட்சய பாத்ரா அமைப்பிடம் சிலஆண்டுகளுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத் தாகி மூன்றேகால் ஆண்டுகள் (40 மாதங்கள்) ஆகிவிட்டன. ஆனால்இப்பணிகள் இன்னும் நிறைவ டையவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments