ஏழைப் பெண்களுக்கு நிலம் வழங்கி வாழ்வில் ஒளியேற்றிய கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்: பத்மபூஷண் விருது வழங்கி மத்திய அரசு கவுரவம்

ஏழைப் பெண்கள் 13,500 பேருக்குதலா ஒரு ஏக்கர் நிலம் வழங்கிஅவர்கள் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி கிராமத்தில் 1926-ல் ராமசாமி-நாகம்மாள் தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். 11 வயதில் தந்தை காலமானார். அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், மதுரையின் முதல்பெண் பட்டதாரி என்று போற்றப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments