
ஆம்பூர் அருகே தூய்மைப் பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து மாலை அணிவித்து துப்புரவுப் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் நேற்று தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம், வடபுதுப்பட்டு ஊராட்சியில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக ஜெயலட்சுமி (42) என்பவர் வெற்றிபெற்றார். கூலி வேலை செய்து வந்த ஜெயலட்சுமியை ஊராட்சி மன்ற தலைவராக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்களித்து தேர்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தனது பணிகளை ஜெயலட்சுமி நேற்று தொடங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments