மழை வெள்ளத்தை தாங்கி வளரும் பாரம்பரிய நெல் ரகங்கள்: பல நாட்கள் தண்ணீர் தேங்கினாலும் பாதிப்பு இருக்காது

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் பெரும்பாலான வயல்களில் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வரும் நிலையில், பாரம்பரிய நெல் ரகங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வயலில் பல நாட்களாக தண்ணீர்தேங்கி நிற்பதால் இளம் நெற்பயிர்களின் வேர்கள் அழுகத் தொடங்கிஉள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். தற்போது, மழைநீர் வடிந்த இடங்களில் விவசாயிகள் யூரியா உரம் தெளித்து பயிரை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments