
பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள் நேர்காணலின்போது, ‘டிஜிலாக்கர்’ செயலி மூலம் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் வசதியை பாஸ்போர்ட் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், ஆவணங்களை பத்திரமாக கையாள முடிவதோடு, நேரமும் மிச்சமாகும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு, வியாபாரம், சுற்றுலா, கல்வி, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுப்பது கட்டாயம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பாஸ்போர்ட் எடுப்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது பாஸ்போர்ட் எடுப்பது மிக எளிதாக மாறிவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xpPojf
0 Comments