
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, மதுராந்தகம்,மறைமலை நகர் ஆகிய நகராட்சிகள், கருங்குழி, அச்சிறுப்பாக்கம், இடைக்கழிநாடு, மாமல்லபுரம்,திருக்கழுக்குன்றம், திருப்போருர்உள்ளிட்ட பேரூராட்சிகளுக்குக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
இதற்கான ஆயத்தப் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் துரிதமாக செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு காஞ்சிபுரம், கடலூர் மாவட்டத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள 7,500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மறைமலை நகர் நகராட்சி சமுதாயக் கூடத்தில் வைக்கப்பட்டு கடந்த மாதம் 27-ம்தேதி முதல் பெங்களுர் பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டு முடிவுற்றுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qfq1zi
0 Comments