
கரோனா பாதிப்பு குறைந்த பிறகு, அரசு போக்குவரத்துக் கழகங்களில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் 1.85 கோடியாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் பலமாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் சேவை, கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் படிப்படியாக தொடங்கப்பட்டது. ஆனால், மக்கள் மத்தியில் கரோனா அச்சம் இருந்ததால், பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. பெரும்பாலான மக்கள் தங்களது பயன்பாட்டுக்கு இருசக்கர வாகனங்கள், கார்களை பயன்படுத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments