புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது; முதல்வர் ஸ்டாலினுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி: சேலத்தில் அமைச்சர்கள் பெருமிதம்

‘புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது முதல்வர் ஸ்டாலினுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி,’ என சேலத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.

சேலத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்து வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களிடம் நேற்று நடந்த சிறப்பு மக்கள் குறை தீர் முகாமில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் மனுக்களை பெற்றனர். முகாமுக்கு ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்தார். சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments