
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான சட்டம் இயற்ற வேண்டும் என்று திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி திமுக எம்.பி.க்கள் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுகமகளிரணிச் செயலாளர் கனிமொழி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments