அதிமுக, பாஜகவினர் மோதல் வழக்கு: வானதி சீனிவாசன் உட்பட 7 பேர் விடுதலை

கோவையில் அதிமுக மற்றும் பாஜகவினர் இடையே நிகழ்ந்த தேர்தல் மோதல் வழக்கில், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உட்பட 7 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

தமிழகத்தில் கடந்த 2016-ம்ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசனும், அதிமுகசார்பில் அம்மன் அர்ஜூனனும் போட்டியிட்டனர். தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்ற மறுநாள், வானதி சீனிவாசன் பெரியகடை வீதி அருகேயுள்ள கோயிலுக்கு சென்றபோது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments