
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து லட்சக்கணக் கானோர் புறப்பட்டுச் சென்றனர். சென்னையில் இருந்து மட்டும் 6 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். கனமழையையும் பொருட்படுத்தாது ஏராளமான பொதுமக்கள் கடைகளில் குவிந்தனர்.
தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை இன்று (4-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. கடந்த ஒரு வாரமாகவே தீபாவளி விற்பனை களை கட்டியிருந்தது. புத்தாடை, ஆபரணங்கள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதில் மக்கள் ஆர்வமாக இருந்தனர். இதனால், வர்த்தகப் பகுதிகளிலும் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் ஒருவாரமாக பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல் துணிக் கடைகளில் மக்கள் குவிந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments