
தாம்பரம் மாநகராட்சி உருவாக்குவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், விரைவில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட உள்ளார். மேலும், 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் முதல் கட்டமாக இணைக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் முடிவில் துறையின் அமைச்சர் கே.என்.நேரு, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து தாம்பரம்மாநகராட்சியுடன் இணைக்கப்படும் பகுதிகள் குறித்தும், மாநகராட்சி உருவாக்கம் குறித்தும் அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது தாம்பரம் மாநகராட்சிக்கான சட்டத்தை உருவாக்கி, சட்டப்பேரவை கூட்டம் இல்லாத நிலையில், ஆளுநர் ஒப்புதலை பெற்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments