
தீபாவளி பண்டிகையின்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் சுமார் 2,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 11 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகை கடந்த 4-ம்தேதி கொண்டாடப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியும், தமிழக அரசின் வழிகாட்டுதல்படியும் தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments