
தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில், 175 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, அதன் முழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகள் உள்ளன. மழைகாரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 114 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகளும் என முழு கொள்ளவை எட்டியுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments