
டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 159 வீடுகள் சேதமடைந்துள்ளன. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் பரவலாக மழை பெய்துகொண்டே இருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக, நேற்று முன்தினம் காலை தொடங்கி நேற்று காலை 7 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் மாவட்டத்தில் 123 குடிசை வீடுகள், 36 ஓட்டு வீடுகள் என 159 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், 12 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xwrbbh
0 Comments