
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. நீர்மட்டத்தை நிலைநிறுத்த கேரளப் பகுதிக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
முல்லை பெரியாறு அணையில் நீர் நிலைநிறுத்த விதிமுறைப்படி (ரூல் கர்வ்) வரும் 20-ம் தேதி வரை 141 அடி அளவுக்கு நீரைத் தேக்கவும், அதன் பின்பு ஒவ்வொரு நாளும் நீரின் அளவை சிறிது சிறிதாக அதிகரித்து நவ.30-ல் 142 அடியாக உயர்த்தவும் மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments