
சசிகலாவுக்கு ஆதரவான ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் கருத்து தொடர்பாக பொதுக்குழுவை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று அதிமுகவில் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். சில நாட்களிலேயே சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி உயர்த்தினார். பின்னர்சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் செல்ல, முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EjIu1b
0 Comments