
நவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுஉள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் இக்கொலுவைப் பார்த்து, மகிழ்ந்து செல்கின்றனர்.
சைவத் திருத்தலங்களில் முதன்மைப் பெற்ற திருத்தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர்கோயிலில், நவராத்திரியை ஒட்டிபிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. கோயில் கொலு மண்டபத்தில் சுமார் 30 அடி நீளம், 30 அடி அகலம், 30 அடி உயரத்தில் 21 பெரிய படிகளைக் கொண்டு இக்கொலு அமைக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WQpQhm
0 Comments